Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

வெள்ளி, 15 மே, 2015

மகிழ்ச்சியை எங்கே போய்த் தேடுவது


மகிழ்ச்சியை எங்கே போய்த் தேடுவது

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன.  மகிழ்ச்சியை எங்கேப் போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா?
நாமாக நம் வாழ்க்கையை மகிழ்ச்சியை அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம்
The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த
ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை
பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது.
70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள் ஆகும்
“இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான  
  மகிழ்ச்சிக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

    மகிழ்ச்சியின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது,அள்ளிக்கொடுங்கள். ஏனென்றால் நாம்  போகும்போது  சிறிதும்   அள்ளிச்செல்ல முடியாது

ஞாயிறு, 10 மே, 2015

LIC ..World No. 1

>> LIC OF INDIA has Declared Number ONE Insurance Company in the WORLD..

>>Bharat Parekh LIC Agent of Nagpur declared NUMBER TWO AGENT in the World ...

>>Total premium income was 3,80,042 crores

>>Life Fund is more than 16,07,025 crores.

>> Fastest death claim record...
A Death Claim of 3.11 crores was settled in central office...Within 15 minutes it was deposited into bank account of Nominee after committee accepted it...

>>LIC of India Total Book Assets is 17,06,192 Crores...Market value is much more...

>>International All Over world Premium Collection is 265.13 million dollars..

>>In LIC Annual report provision for BAD AND SUBSTANDARD ASSETS is only 0.2%.

>> In 11 th 5 year plan lic had invested 7,04,151 crores..

>>LIC of India is the largest insurance company in the world. 29.61 Crores Individual Policies and group policies 11.54 crores.

>>All Major Private companies got loan from LIC.

>> In india every ONE MINUTE we are using is mostly funded with loan by Lic i.e road,public utilities, highways, flyovers, electricity, rural sector....

>>LIC of india does not take loan but LIC of india gives loan to everybody

விருப்பட்டதை செய்ய....

ஓஷோ சொன்னக் கதை:

அவன் ஒரு பிச்சைக் காரனின் மகன். இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பான்.   அவன் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தான் என்றால், அரசனின் யானை வீதியில் செல்லும் போது, அவனால் அதன் வாலைப் பிடித்து அந்த யானையை நகர விடாமல் செய்ய முடியும்.  சில சமயங்களில் அரசனுக்கே தர்ம சங்கடமாகி விடும். ஏனெனில் அவர் யானை மீது உட்கார்ந்து கொண்டிருப்பார்,  மந்தை முழுவதும் மக்கள் கூடி நின்று இக்காட்சியைப் பார்த்து சிரிப்பார்கள்.  எல்லாம் இந்த பிச்சைக்காரனின் மகனால் விளைவது.  அரசர் தன் மந்திரியை அழைத்தார்.  "ஏதாவதுசெய்தே ஆகவேண்டும்.  இது எனக்கு பெரிய அவமானம்.  கிராமத்தின் வழியாக செல்வதற்கே நான் பயப்பட வேண்டியிருக்கிறது. அந்த பையன் சில சமயங்களில் வேறு கிராமங்களுக்கும் வந்து விடுகிறான்!  எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவன் யானையின் வாலைப் பிடித்து விடுகிறான்,  அதுவும் நகராமல் நின்று விடுகிறது.  அந்தப் பையன் அதிக சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். அவன் சக்தியை நீக்க ஏதாவது செய்தாக வேண்டும்".  மந்திரி கூறினார்: "நான் சென்று அறிவாளிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில், அவன் சக்தியை எப்படி நீக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அவன் ஒரு பிச்சைக்காரன்.   அவன் கடை வைத்திருப்பவன் என்றால்,  அது அவன் சக்தியை உறிஞ்சி விடும்.   தொடக்கப் பள்ளீயில் அவன் ஒரு ஆசிரியராக இருந்தான் என்றால்,  அப்பொழுதும் அவன் சக்தி நீக்கப்பட்டு விடும்.   ஒரு அலுவலகத்தில் அவன் வேலை செய்தான் என்றாலும், அவன் சக்தி குறைந்து விடும்.   ஆனால் அவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை, அவன் வேடிக்கைக்காக வாழ்கிறான்,   மக்கள் அவனை விரும்புகிறார்கள்,  அவனுக்கு உணவிடுகிறார்கள்...  அதனால் அவனுக்கு உணவிற்கும் பஞ்சமில்லை.  அவன் மகிழ்ச்சியாய் இருக்கிறான்.  சாப்பிட்டுவிட்டு தூங்குகிறான்.  அதனால், இது மிகவும் கடினம். ஆனாலும் நான்ஆலோசனை கேட்கச் செல்கிறேன்.   ஒரு வயதான அறிவாளியிடம் சென்றார்.  அவர் கூறினார்: "ஒன்று செய்யுங்கள்.  அந்தப் பையனிடம் சென்று  நீங்கள் அவனுக்குத் தினமும் ஒரு தங்கக் காசு கொடுப்பதாகவும்,   அதற்காக அவன் ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள் - உண்மையிலேயே, அது சிறிய வேலைதான்.   அவன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான்.   நீங்கள் அவனுக்கு தினமும் ஒரு தங்கக்காசு தருவீர்கள். மந்திரி கேட்டார்:  "ஆனால் இது எப்படி உதவும்? இது அவனை இன்னும் அதிக சக்தி படைத்தவனாக வேண்டுமானால் மாற்றலாம். ஒரு பணம் கிடைத்தவுடன் அவன் இன்னும் அதிகமாக சாப்பிடுவான். பிச்சை எடுப்பதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டான்." அந்த அறிவாளி கூறினார்: "கவலைப்படாதீர்கள், நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்."  அவ்வாறே செய்யப் பட்டது. அடுத்த வாரம், அரசர் கடந்து செல்லும் போது, அந்த பையன் யானையை நிறுத்த முயற்சித்து தோல்வியடைந்தான்.  
அதனுடன் இழுத்துச் செல்லப்பட்டான். 
என்ன நடந்தது? 
அவன் கவனம் கலைந்து விட்டது . கவலை நுழைந்துவிட்டது.
ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும், கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி வைக்க வேண்டும்  என்பதை,
அவன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். 
அது கவலையாக மாறி,
அவன் முழு இருத்தலைப் பிரித்து விடுகிறது.
தூங்கும் போது கூட அது மாலை என்பதைப் போல் கனவு காண தொடங்கி விடுகிறான்.  கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி விட்டு, தன் ரூபாயைப் பெற்றுக் கொள்கிறான் அவன்.
  பிறகு அந்தத் தங்க ரூபாய்களைச் சேகரிக்கத் தொடங்கி விடுகிறான்.  ஏழு வைத்திருந்தான்,  இப்போது எட்டு,  பிறகு இவ்வளவு நாட்களுக்குள் நூறு ரூபாய்களை பெற்றுவிட முடியும் என்ற கணக்குப் போட துவங்கி விடுவான். பிறகு, அது இருநூறாகும்.   கணக்கு வந்தவுடன்  அங்கு வேடிக்கை மறந்து விடுகிறது. அதுவும் அவன் செய்ய வேண்டியது மிகச்சிறிய வேலைதான், விளக்கேற்ற வேண்டும். ஒரு நிமிட வேலைதான், அவ்வளவு கூட இல்லை,
ஒரு கணத்தில் செய்து விடக் கூடியது.   ஆனால் அது கவலையாகி விட்டது.
அது அவனது சக்தியை எல்லாம் நீக்கிவிட்டது.  இப்படி தான் சமுதாயம் முழுவதும் உங்கள் சக்தியை உறிஞ்சி விடுகின்றன .  உங்களை முழு இருத்தலோடு  வாழ விடுவதில்லை .. 
தளர்வோடு வாழ விடுவதில்லை ..  உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய விடுவதில்லை .
ஒரு நாள் நீங்கள் வேலைக்கு போகாமல் இயல்பாக உங்கள் விருப்பம் போல், ஒரு நாள் கூட இருக்க இந்த சமுதாயம் இருக்க விடாது .
ஏன் என்றால், நீ இயல்பாக இருந்தால் நீ பலம் பெற்று விடுவாய் .  சுய பலம் பெற்று விடுவாய் . சந்தோஷ மனிதனாக மாறிவிடுவாய்   பிறகு எந்த சமுதாயத்தையும் ,
எந்த பூசாரியையும் நம்பி இருக்க மாட்டாய் .
விளையாட்டாக வாழ்.  விருப்பட்டதை செய் .. 
வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் ..

சனி, 9 மே, 2015

நம்பிக்கை

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது....

காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது.

அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய
சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்றமூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.

சிறுவன் உடனே..‘
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன்பெயர் என்ன ?”என்று கேட்டான் .

'நம்பிக்கை' என்றது மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாது...

பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?

பெண் அழகிய தேவதையா,சூனியக்காரக் கிழவியா?

ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களின்  சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் .”நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”

வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விடை சொன்னால்தான் திருமணம் எனச் சொல்லி யிருந்தாள்.கேள்வி”ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்”.

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்அவள் சொன்னாள்”விடை சொல்கிறேன்.  அதனால்அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்”

அவன் சொன்னான் “என்ன கேட்டாலும் தருகிறேன்”

அவள் சொன்னாள்”தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் மற்ற மன்னனிடம் சொல்லி அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது;இவனுக்கு நாடும் கிடைத்தது.

கிழவியிடம் வந்தான்  வேண்டியதைக்கேள் என்றான்.

அவள் கேட்டாள்”நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்

அவள் சொன்னாள்.”நாம் தனியாக இருக்கும் போது கிழவியாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;தனியே இருக்கும்போது அழகிய பெண்ணாக இருந்தால் வெளியே செல்கையில் சூனியக்காரக் கிழவியாகி விடுவேன்.எது உன் விருப்பம்?”

அவன் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீதான் எடுக்க வேண்டும்”

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”

ஆம்!

பெண் அவள் சம்பத்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப் படும்போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல் படுங்கள்!

(சுகி சிவம் சொல்லக்கேட்டது).

செவ்வாய், 5 மே, 2015

விற்பனைக்காரர்கள்

விற்பனைக்காரர்கள்!
====================

ஊருக்கு போகும் மனைவியிடம் கத்திரி கழிஞ்சி போக சொல்லும் கனவன்...

துப்பாக்கி பட வில்லன் போல் சைவசாப்பாட்டிலேயே உடம்பை ஏற்றச் சொல்லும் அப்பா...

அந்த நாளையப் படம் பார்க்க உசுப்பேற்றும் நன்பன்...

குருஜியின் யோகா வகுப்பிற்கு அழைத்துச்
செல்லும் பக்கத்து வீட்டுக்காரர்...

ரத்தக்கொதிப்பெல்லாம்
கிட்டயே அண்டாது எனச் சொல்லி கோமியம் விற்கும் குருஜி....

"நல்லகாலம் பொறக்கப் போகுதுன்னு" டிவிட்டரில் ஏமாற்றிய அரசியல்வாதி

செய்வீர்களா? செய்வீர்களா?
எனக்கேட்டு வென்ற அம்மா

யார் சொன்னது வரிப்புலி இனம்
போல அழி விளிம்பில் விற்பனைக்காரர்கள் என்று?

நம்மைச் சுற்றிதான் எவ்வளவு விற்பனைக் காரர்கள்!
உலகின் ஒரே பணி விற்பனைதானே?

ஞாயிறு, 3 மே, 2015

Regular income to yr child, even in your absence

Unique solution giving regular income to yr child, even in yr absence.Get guaranteed benefit of 110% of sum assured on maturity. Call today !
- K Dhamodharan (LIFE INSURANCE COUNSELOR) 9940857995