Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

வியாழன், 28 மார்ச், 2024

நன்றி சொல்லுங்க.....


னித பண்புகளிலேயே மிகஉயர்ந்த பண்பு நன்றி கூறுதல். 

நாம் பிறருக்கு கூறும் நன்றியால் என்ன லாபம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நீங்கள் நன்றி கூறும் இடத்தில் உயர்ந்து நிற்கிறீர்கள். அந்த உயரம் உங்களுக்கு தெரியாது. நன்றி கூறினால் உங்கள் இமேஜ் மட்டும் அல்ல உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியும் உயரும்.

நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை என்றே கூறலாம். நாம் ஒருவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பின்றி செய்கிற உதவியாக இருந்தாலும், நமக்கு மற்றொருவர் செய்கின்ற உதவியாக இருந்தாலும், 'நன்றி' என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.

''நன்றியையும் பாராட்டையும்'' மனதில் நினைத்தால் மட்டும் போதாது. உடனே அதை வெளிப்படுத்த வேண்டும். நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்து விட வேண்டும்.

நன்றி, பாராட்டு உரியவருக்குக் கொடுக்கும் போதுதான் அவர்கள் மீண்டும் அதைக் கூடுதல் மதிப்புடன் நமக்குத் திருப்பிக் கொடுப்பார்கள்.

நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.

நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம், அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள்.

உங்களது நன்றியைத் தெரிவிக்காவிட்டால், அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்து போகவோ கூடும்.

"தேள் ஒன்று கங்கையில் மிதந்து சென்றது. அதன் மீது பரிதாபப்பட்ட ஒருவர், அதை எடுத்து வெளியில் விட முயன்றார். அது அவரைக் கொட்டி விட்டு மறுபடியும் நீரில் விழுந்தது. மீண்டும் எடுத்து விட்டார். மீண்டும் அது கொட்டிற்று. 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று வேறு ஒருவர் கேட்டார். அதற்கு அவர் சொன்னார்.

கடைசி வரை அது தன் சுபாவத்தை விடவில்லை. அதுபோல நன்றி செய்கின்ற எனது கடமையில் இருந்து தவறவில்லை' என்றார்.

நன்றி சொல்லும்போது அதை உண்மையாகச் சொல்லுங்கள். நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்

நன்றி சொல்லும்போது வார்த்தைகளை விழுங்காதீர்கள். முணு முணுக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில் வெளிப்பட வேண்டும்.

நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள். நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக இருக்கும்.

வாழ்க்கையில் இனி சந்தர்ப்பங்களில் நாம் நன்றி சொல்ல வேண்டிய தருணங்களில் நன்றி சொல்வோம். வாழ்க்கையில் உயர்வோம். நன்றி!

திங்கள், 4 மார்ச், 2024

எப்போதும் வணிகத்தில் வெற்றியாலராக இருக்க...

எப்போதும் வணிகத்தில் வெற்றியாலராக இருக்க...

💐முதன் முதலில் வணிகம் துவங்கும்போது எவ்வளவு ஆர்வமும், வேகமும் இருந்ததோ அதே அளவு எப்போதும் இருந்தால் வெற்றிதான்.

 


   💐 தூய்மை,ஒழுக்கம்,நேர்மை இவை வெற்றிக்கு மிக அவசியம்

💐 வணிகம் என்பது வெறும் வேலையும்,கடைமையும் மட்டுமல்ல அது ஒரு தவம், அது ஒரு கலை.

💐காத்திருத்தலும், நீடித்திருத்தலுமே வணிக வெற்றிக்கு பிரதான காரணமாகும்.


💐ஒரு நாளைக்கு எத்தனை முடிவெடுக்கிறோம், எத்தனை சரியான முடிவு, அதில் எத்தனை செயல்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றிக்கான வாய்ப்பாடே அடங்கியுள்ளது.

💐போரைப்போல் இறுதி வெற்றிக்காக கடுமையாக போராடவேண்டும், இறுதி என்பதற்க்கு  முடிவே இல்லை.....




செவ்வாய், 30 ஜனவரி, 2024

அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.....!!
குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது....!!
அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்......!! 

குடிக்கத் தண்ணீர் இல்லாமல்......,
அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.....!!
தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.....!! 
மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.....!!
அங்கே ஆட்கள் யாரும் இல்லை.....!! 

நீங்கள் எப்படிப்பட்டவர்
ஒரு கையால் அடித்து இயக்கும் அடி பம்பும் ..... ,
அருகே ஒரு ஜக்கில்,      தண்ணீரும் இருந்தன.....! 
ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்....!

"ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்"....!
"குடித்து விட்டு " 
மறுபடியும் ஜக்கில்,
" தண்ணீரை நிரப்பி வைத்து விட்டு செல்லவும்."...!!!

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது.....!!
அதில் தண்ணீர் ஊற்றினால்..... ,
அது இயங்குமா...,
தண்ணீர் வருமா....,,
என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது....!!

அது இயங்கா விட்டால்....,
அந்தத் கொஞ்ச தண்ணீரும் வீணாகி விடும்.....!!

அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்....... ,
தாகமும் தணியும்......!!
உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.....!!

அந்த பயணி யோசித்தான்....!!

தண்ணீரை குடித்து விடுவதே ....., 
புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது........!!

ஆனால் ..
மனது நியாயமாக யோசித்தது.
ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல்......, அந்த பம்ப் இயங்குவதாக இருந்து,
அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரை நான் குடித்து விட்டால் ,
அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.......!!

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு,
எந்த பயனும் இல்லாமல் போக....,
தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!! 

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.....!

ஆனது ஆகட்டும் என்று......,
அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு,
அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.....!! 
தண்ணீர் வர ஆரம்பித்தது....!!

தாகம் தீர,
வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு,
தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.....!!
அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில்....,
அவன் மனம் நிறைந்திருந்தது.....!!

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை....,
பிறருக்கும்,
அதே போல பயன்படும்படி விட்டு போக வேண்டும்......!!
எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது....!!

 "அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன "....,
என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது....!!
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" ....!!
என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்...,
"இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!

உண்மையில் இன்று நம் நிஜ வாழ்க்கையில் 99.99 சதவீத மக்கள் சுயநலத்திற்காக உள்ளார்கள்.
ஆனால் வெறும் 00.01 சதவீத மக்கள் மட்டுமே ...
பொது நலத்துடன் இருப்பதால் தான் என்னவோ.. இந்த உலகம் இன்னும் அழிந்து போகாமல் இயங்குகிறது...
நீங்கள் எப்படிப்பட்டவர்??

👍

கிழக்கிந்தியக் கம்ப்பெனி உருவாக காரணம் என்ன?

வரலாறு
1592 - கிழக்கிந்தியக் கம்ப்பெனியைத் தொடங்குவதற்குத் தூண்டுகோலாய் இருந்த, மாட்ரே-டி-டியூஸ் என்ற ஸ்பானிய வணிகக் கப்பலை இங்கிலாந்து கைப்பற்றியமை நிகழ்ந்தது. 

1585-1604இல் நடைபெற்ற ஆங்கிலேய-ஸ்பானியப் போரின்போது கைப்பற்றப்பட்ட இந்த ஒரு கப்பலில் மட்டும் இருந்த அரை மில்லியன் பவுண்டு மதிப்புள்ள சரக்குகள், அன்றைய இங்கிலாந்து அரசின் கருவூலத்திலிருந்த மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட பாதி என்பதே, இங்கிலாந்தின் செல்வந்தர்களை கிழக்கத்திய நாடுகளுடனான(இந்தியாவுடனான!) வணிகத்தின்பால் திருப்பியது.

 ஃப்ளோரஸ் சண்டையில், ஐந்து மணி நேரம் போராடி, இந்தக் கப்பலைக் கைப்பற்றி, இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தபோது, இங்கிலாந்து அதுவரை கண்டிராத மிகப்பெரிய கப்பலாக இது இருந்தது. இந்தியா, சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கம், வெள்ளி, முத்துக்கள் என்று தொடங்கி, மிளகு, பட்டை, கிராம்பு என்று மிகநீண்ட பட்டியலாக இருந்த, 900 டன் விலை மதிப்புமிக்க பொருட்கள் மட்டுமின்றி, கப்பலிலிருந்த மாலுமியின் கையேடும் இந்தியா, சீனா, ஜப்பான் உடனான வணிகம் குறித்த பல்வேறு தகவல்களை அளித்து, ஆங்கிலேய வணிகத்தின் தொடக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது.
 ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியர்களும் மட்டுமே அறிந்திருந்த பசிஃபிக் பெருங்கடலில் பயணித்த முதல் ஆங்கிலேயர் ஃப்ரான்சிஸ் ட்ரேக்தான். தொடக்கத்தில் அமெரிக்கக் கண்டத்திலிருந்த ஸ்பானியக் குடியேற்றங்களைக் கொள்ளையிட்டு, தங்கம்-வெள்ளியைக் கொண்டுவரவே சென்ற அவர், பின்னர் மணமூட்டிகள் தீவு என்றழைக்கப்பட்ட மலுக்கு தீவுகளுக்கு(இந்தோனேஷியா) சென்று கிராம்பு, ஜாதிக்காய் போன்றவற்றுடன் திரும்பியபோது, இங்கிலாந்தின் நாயகனாகவே கொண்டாடப்பட்டார் என்பதிலிருந்து, கடற்பயணங்களில் இங்கிலாந்துக்கிருந்த திறன் அவ்வளவுதான் என்பது புரியும். 

1588இல் இங்கிலாந்தின்மீது படையெடுத்துவந்த ஸ்பானியக் கப்பலணியை வென்று, சரக்குகளுடன் கப்பல்களைக் கைப்பற்றியபோதுதான் இங்கிலாந்தின் வணிகர்கள் முதன்முறையாக இந்தியாவுடனான வணிகம்குறித்துச் சிந்தித்தனர்.

 1591இல் அரசி அனுமதியளிக்க, மூன்று கப்பல்களில் ஜேம்ஸ் லங்க்காஸ்ட்டர் இந்தியா நோக்கிப் பயணித்ததே ஆங்கிலேயர்களின் முதல் இந்தியப் பயணம். வழியில் தென்பட்ட அனைத்துக் கப்பல்களையும் கொள்ளையிட்டு, இலங்கை, மலாய் தீபகற்பம் ஆகியவற்றை அடைந்து, திரும்பும் வழியில் பெரும் சேதங்களைச் சந்தித்து, வெறும் 25 பேருடன் 1594இல் லங்க்காஸ்ட்டர் இங்கிலாந்து திரும்பினார். ஆனாலும், இதற்கிடையில் கைப்பற்றப்பட்டிருந்த மாட்ரே-டி-டியூஸ் கப்பல், இந்தியாவுடனான வணிகத்தால் கிடைக்கும் பெரும் செல்வத்தை உணர்த்தியிருந்த நிலையில், லங்க்காஸ்ட்டரின் பயணத்தில் கிடைத்த அனுபவங்களையும், தகவல்களையும் அடிப்படையாகக்கொண்டே, ஆங்கிலேயர்களின் இந்திய வணிகம் தொடங்கப்பட்டது. 
1600இல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்ப்பெனி தொடங்கப்பட, 

1602இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்ப்பெனியும் தொடங்கப்பட்டது!

ஆக்கம் : அறிவுக்கடல்

திங்கள், 29 ஜனவரி, 2024

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள். 
     வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும்.

ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்
 ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும்.
ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது?
60 வயதிலா?
30 வயதிலா?
ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். .
வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.

 ரிட்டையர்மென்ட் கார்பஸ் எவ்வளவு தேவைப்படும் என்பதை கணக்கிடும்போது விலைவாசி உயர்வு, முதலீடு மூலமாக கிடைக்கும் வருவாய் முதலீட்டு காலம் ஆகியவற்றை கவனத்தில் எடுத்து கணக்கிடவேண்டும்.
மிக எளிதான ஃபார்முலா என்னெவென்றால் ஆண்டு வருமானத்தில் குறைந்தது 30%த்தை ஓய்வு காலத்திற்காக கண்டிப்பாக சேமிக்கவேண்டும்.
இந்த 30%த்தில் பாதியை சேஃப் (safe) இன்வெஸ்ட்மென்ட்டாக செய்யவேண்டும்.
மீதியை மீடியம் ரிஸ்க் இன்வெஸ்ட்மென்ட்டில் செய்யலாம்.

சேஃப் (safe) இன்வெஸ்ட்மென்ட்டு என்பது செய்யும் முதலீடும், முதலீடு மூலம் கிடைக்கும் வருமானமும் 100% பாதுகாப்பாக உத்தரவாதமானதாக இருக்கும். வரிசலுகையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
.RBI அறிவிக்கும் REPO Rate ஒட்டியே சேஃப் இன்வஸ்ட்மென்ட் இன் ரிட்டர்ன் இருக்கும் 
LIC PPF போன்றவைகள் சிறந்த  சேஃப் இன்வெஸ்ட்மென்ட் ...

ரிட்டையர்மென்ட் கார்பஸ் தொடர்பாக கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளவும் ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்யவும் முதன்மை நிதி திட்டமிடுநர் கி தாமோதரனை (+91 7358210672)  கலந்து ஆலோசிப்பது சிறந்தது.

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல  ரிட்டயர்மென்ட் கார்பஸை உருவாக்க சிறிய தொகையை இளம் வயதில் இருந்தே முதலீடு செய்து வந்தால் போதும்’ 



ஞாயிறு, 11 டிசம்பர், 2022

உங்கள் போர்ட்ஃபோலியோவை

உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வதற்கும், அடுத்த ஆண்டு முதலீடுகளைத் திட்டமிடுவதற்கும் ஆண்டு இறுதி சரியானது ஆகும்.
ஏனெனில், வரி செலுத்துவோர், வரிச் சேமிப்பு நோக்கங்களுக்காக முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரமும் இதுவாகும்.

நீங்கள் வரி சேமிப்பு முதலீடுகளைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நல்ல வருமானத்தையும் தரக்கூடியதும், பாதுகாப்பான வரிச்சலுகை திட்டங்கள் க

  வரி சேமிப்பு திட்டமிடுங்க 

 வரி சேமிப்பு முதலீடுகளைத் தேடுகிறீர்கள் என்றால் இங்கே சில பிரபலமான பாதுகாப்பான திட்டங்கள் உள்ளன.

இந்த 5 வரி சேமிப்பு திட்டத்தை ஞாபகம் வச்சிக்கோங்க.. கண்ணை மூடிட்டு முதலீடு பண்ணலாம்
வரி செலுத்துவோர், வரிச் சேமிப்பு நோக்கங்களுக்காக முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரமும் இதுவாகும்.

உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வதற்கும், அடுத்த ஆண்டு முதலீடுகளைத் திட்டமிடுவதற்கும் ஆண்டு இறுதி சரியானது ஆகும்.
ஏனெனில், வரி செலுத்துவோர், வரிச் சேமிப்பு நோக்கங்களுக்காக முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரமும் இதுவாகும்.

நீங்கள் வரி சேமிப்பு முதலீடுகளைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நல்ல வருமானத்தையும் தரக்கூடியதும், பாதுகாப்பான வரிச்சலுகை திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை வழங்கும் PPF என்பது நீண்ட கால வரி சேமிப்பு முதலீடுகளில் ஒன்றாகும்.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு பல தவணைகள் அல்லது மொத்த முதலீடு மூலம் நீங்கள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்யலாம்.

உங்கள் முதலீட்டின் பன்முகத்தன்மையுடன், இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும். தற்போது, PPF முதலீட்டின் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆக உள்ளது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)

NPS என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் வரி-சேமிப்பு திட்டமாகும், இது ரிஸ்க்-எதிர்ப்பு முதலீட்டாளர்களுக்கு ஓய்வூதிய கார்பஸை உருவாக்குவதற்கு ஏற்றது.

இந்தத் திட்டம் பிரிவு 80CCD இன் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரி விலக்கு பெற அனுமதிக்கிறது – பிரிவு CCD (1) இன் கீழ் ரூ.1.5 லட்சம், மற்றும் பிரிவு CCD (1B) இன் கீழ் ரூ.50,000 கூடுதலாக வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம்

காப்பீட்டுத் திட்டங்கள்

காப்பீடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத திட்டமாக காணப்படுகிறது. இதில் சில பாலிசியின் பிரீமியத்துக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி (PF)

ஓய்வூதிய திட்டமிடலுக்கு ஏற்ற மற்றொரு வரி சேமிப்பு திட்டம் வருங்கால வைப்பு நிதி ஆகும். பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பங்களிக்கும் ஊழியர்கள் பிரிவு 80C இன் கீழ் வரி தள்ளுபடிக்கு தகுதி பெறுகின்றனர்.

மியூச்சுவல் ஃபண்டுகள்

அதிக வருமானம் மற்றும் வரிச் சலுகைகள் முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களை வழங்குகின்றன.