Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

சனி, 17 மார்ச், 2018

தலைமைப் பண்பு !!


தலைமைப் பண்பு !!
💐 தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும், ஆளுவதும் மட்டும் இல்லை. நம் வாழ்க்கையில் ஏற்படும் சாதகமற்ற சு+ழல்களில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நமக்கு தேவையான தெளிவையும், மனத்திடத்தையும் அளிப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு ஆகும்.

தலைமைப் பண்பின் அவசியம் :

💐வீட்டில் உள்ள சூழல் மற்றும் வெளியுலகத்தில் இருக்கும் சூழல் என இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. வீட்டில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படலாம். நீங்கள் விழுவதற்கு முன்பே உங்களை தூக்கிப் பிடிக்கலாம். உங்கள் மனம் கோணாமல் உங்கள் தவறுகளை கண்டிக்கப்படலாம். ஆனால், வெளியுலகம் இதற்கு முற்றிலும் மாறானது.

💐ஆகையால் வெளியுலகத்தை எதிர்கொள்வதற்கு, நீங்கள் கீழே விழுந்தாலும் தானே எழுந்து நிற்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய திறனை நீங்கள் வளர்த்துக் கொள்வதற்கு தலைமைப் பண்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பொறுப்புகளைதயங்காமல் ஏற்பது:

💐 பொறுப்புகளை விரும்பி ஏற்பது, தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த வழிமுறை ஆகும். மேலும், கூடுதல் பொறுப்புகளை ஏற்பதன் மூலம் நம்முடைய ஆற்றலின் அளவையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

பின்பற்றுதல் :

💐கண்மூடித்தனமாக ஒருவரை பின்பற்றுவது மடமையாகும். அதற்காக யாரையும் பின்பற்றக்கூடாது என்பது இல்லை. சில விஷயங்களில் நம்மைவிட சிறந்தவர்களை நாம் பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை.

💐மேலும், நம்மைவிட சிறந்தவர்களை போட்டியாளராகக் கருதாமல் அவர்களை மதித்து உரிய மரியாதையை அளிப்பதும் சிறந்த தலைமைப் பண்பாகும்.

விழித்திருத்தல் :

💐சூழ்நிலையை நன்றாக உணர்ந்து, அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை வரும் முன்னரே யூகிப்பதுதான் சிறந்த தலைமைப் பண்பாகும். ஒரு சூழலை நன்றாக உணர்வதற்கு, முதலில் நமது சூழலைக் குறித்த விழிப்புணர்வு எப்பொழுதும் இருக்க வேண்டும்.

💐அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளையும் கவனித்து, அதை சூழலுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். மேலும், பிரச்சனைகள் நேராமல் இருக்க ஏதேனும் வழி உள்ளதா என்பதையும் யோசிக்க வேண்டும்.

பிறரை ஊக்குவித்தல் :
💐தன் வேலையை மட்டும் சிறப்பாகச் செய்வது தலைமைப் பண்பிற்கான அடையாளம் அல்ல. தன் குழுவில் உள்ளவர்களின் தனித்துவத்தைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அந்த ஊக்கம் அவர்களின் சிறந்த திறனை வெளிப்படுத்த செய்வதாக இருக்க வேண்டும். இதுவே சிறந்த தலைமைப் பண்பிற்கான அடையாளம் ஆகும்.

💐எனவே, யாரையும் போட்டியாக கருதாமல், அனைவரின் திறமைகளையும் நீங்கள் அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் உங்களுடைய சிறிய ஊக்குவிப்பு கூட பிறரின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக இருக்கலாம்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

வெயிலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?


வெயிலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

வெயிலைத் தவிர்ப்போம் !

👉 வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியில் விளையாட வேண்டாம் என்று குழந்தைகளுக்குப் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். விளையாட வேண்டும் என்று நினைத்தால் 4 மணிக்கு மேல் விளையாட அனுப்பலாம்.

👉 வீடு வெளிச்சமாக இருப்பது மட்டுமின்றி, காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். வீட்டுக்குள் அனல் அடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குளிர்பானங்கள் :

👉 கோடைக்காலத்தில் காய்கறிகள், கீரைகள், பழங்களை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். குறிப்பாக நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

👉 எண்ணெயில் பொரித்த உணவுகளை கொடுக்க வேண்டாம். அசைவ உணவையும் குறைவாக எடுத்துக்கொள்வது பலன் தரும்.

👉 குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் உணவை மட்டுமே கொடுக்க வேண்டும்.

தோல் பிரச்சனைகள் :

👉 கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் வெயிலில் அதிகமாக விளையாடுவார்கள். வெயில் ஒத்துக்கொள்ளாமல் சில குழந்தைகளுக்குத் தோலில் அரிப்பு ஏற்படலாம். சில நேரம் திட்டுத்திட்டாகவும் அலர்ஜி ஏற்படலாம். சு+ரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்கள் சு+ரிய ஒளி ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

👉 வெயிலில் அதிகம் அலைந்தால் தோலில் கொப்புளம் ஏற்படலாம். முடியின் வேர் பகுதியில் பாக்டீரியா கிருமி தொற்று ஏற்படுவதால் இந்தக் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

👉 கொப்புளம், வியர்க்குரு போன்ற பிரச்சனைகளை தடுக்க குழந்தைகளின் உடலோடு ஒட்டி இருப்பது போன்ற இறுக்கமான ஆடைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தளர்வான உடைகளே ஏற்றவை. அதிலும் பருத்தி ஆடை மிகவும் நல்லது.

நீர்ச்சத்து அவசியம் :

👉 கோடைக்காலத்தில் வெயிலில் அலையாவிட்டாலும்கூட வியர்வை வழியாக உடலில் நீர்ச்சத்து குறைந்துகொண்டே இருக்கும். எனவே, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.

👉 வெயிலை சமாளிக்க குழந்தைகளுக்கு இதமான பானங்களை கொடுப்பதே நல்லது.
பாட்டில், டின்களில் அடைத்து விற்கபடும் கோல போன்ற குளிர்பானங்களைப் பருகுவதைவிட பழச்சாறுகளை கொடுப்பது உடலுக்கு ஊட்டத்தையும் உடனடி சக்தியையும் கொடுக்கும்.

👉 ,குழந்தைகளைத் தினமும் இரண்டு முறை குளிக்க வைப்பதன் மூலம் உடல் சு+ட்டை குறைக்க முடியும். அடிக்கடி முகத்தைக் கழுவுவதால், சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

திங்கள், 5 மார்ச், 2018

நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிகள்


நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான வழிகள்..!


உங்களுக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க உங்களின் நிதி நிலையை நீங்கள் தெரிந்து கொண்டு அதை நல்ல முறையில் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

நிதிப்பிரச்சனை என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டும் இல்லாமல் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் முதல் அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் உண்டான ஒரு பிரச்சனை தான்.

இது போன்ற நிதிப்பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.


கடவுச் சொற்கள் :


நிதி தொடர்பான அனைத்து செயல்களும் மின்னணு மயமாக மாற்றப்பட்டு வருவதால் உங்களின் இணைய வங்கி, மின்னஞ்சல், ஏடிஎம், மொபைல் பாங்கிங், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட கணக்குகளின் பயனாளர்கள் தங்களின் பெயர் மற்றும் கடவுச் சொற்களை நீங்கள் மட்டுமே தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தாளில் எழுதி பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம். உங்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை உங்களின் வாழ்க்கைத்துணை அல்லது வாரிசுகளுக்கு இதை தெரியப்படுத்துங்கள்.

வாரிசு நியமித்தல் :


வாரிசு நியமித்தல் என்பது அவசியமில்லாத ஒன்று எனக் கருதி பெரும்பாலும் தவிர்கின்றனர். இருப்பினும், வங்கி கணக்கு துவங்கவோ, காப்பீட்டு பாலிசி, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு அவசியம் என்பதால் அவற்றின் பயன்கள் சேர வேண்டியவர்களுக்கு எளிமையாகச் சென்றடைய உதவியாக இருக்கும்.

வாரிசு நியமனம் என்பது முதலீடுகள் வாரிசுகளுக்குச் சென்று சேர ஒரு அறங்காவலராக இருப்பதாலும், குடும்ப உறுப்பினர்களுக்குத் தொந்தரவு ஏற்படுதல் மற்றும் உணர்வுப் பூர்வமான அதிர்ச்சி ஆகியவற்றைக் குறைத்திட உதவும்.


மருத்துவக் காப்பீடு


அதிகரித்துவரும் நோய் பாதிப்புகளான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் உடல்நலத்திற்கான செலவினங்களிலிருந்து மீண்டுவர, நீங்கள் ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பது மட்டுமல்லாமல் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பு தரும் திட்டங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


காப்பீடு


ஆண்டு வருமானம் போன்று குறைந்தது 10 மடங்குக்கு எல்ஐசி யில் பாலிசி எடுத்திருப்பது அவசியம்.
கடன்தாரர்,வரி ஆணையம்,நீதிமன்றம் போன்றவைகள்கூட தங்கள் எல்ஐசி பாலிசியின் பணப் பயனை எடுத்துக்கொள்ளாதவாறு தாங்கள் வாங்கும் எல்ஐசி பாலிசியை MWP Act இன் கீழ் வாங்கவும்.

ரிட்டையர்மென்ட்


இந்தியர்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது. 60வயதுக்குபின்பு இன்னொரு 30 வருடங்களாவது வாழ்ந்தே ஆகவேண்டும். ரிட்டையர்மென்ட்டுகாலத்தில் நிலையான உத்தரவாதமான வருமானத்திற்கு இளம்வயதிலேயே திட்டமிடுங்கள்.
நிலையான மற்றும் அரசு உத்திரவாதத்துடன் கூடிய பென்சன் திட்டங்கள் எல்ஐசியில் மட்டும் உள்ளது.

ஆவணங்களைத் திட்டமிடுங்கள் :

உயில்


முக்கிய ஆவணங்களை நெறிப்படுத்தித் திட்டமிடுதல் ஒரு முக்கியமான தவிர்க்கக்கூடாத கடமையாகும். முதலில், உங்கள் சொத்துக்கள் தொடர்பாக உயில் எழுதி வைத்து அதனைப் பதிவு செய்து வைப்பது வாரிசுகளுக்கிடையே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

உங்கள் வங்கி கணக்குகள், எல்.ஐ.சி பாலிசிகள், மருத்துவம், கார் ஆகியவற்றுக்கான பாலிசிகள், நிதி திட்டங்கள், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், பிற சிறு சேமிப்புத் திட்டங்கள், கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றுக்கு எல்லாம் தனித்தனி கோப்புறைகள் வைத்து பராமரிக்க வேண்டும்.

இந்தக் கோப்புறைகளில், இவற்றின் துவக்கம், முதிர்வுக் காலம், முதிர்வு தொகை, மாதாந்திர கட்டணங்கள், செலுத்தும் தேதிகள் மற்றும் பிற அனைத்துத் தகவல்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நிதியும் சிரமும் :


நிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும். அவற்றிலிருந்து சிரமமின்றி மீண்டுவர மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு மட்டுமல்ல உங்களைச் சார்ந்தோருக்கும் பேருதவியாக இருக்கும்.
  எல்.ஐ.சி மூலம் நிதி திட்டமிடுதலில் 22 ஆண்டு காலமாய் உங்கள் நம்பிக்கையான
  கி.தாமோதரன். M.Com,.LLB.,HDCM., 

+91 99408 57995, 

+91 73582 10672