Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு
 (Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது
கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. 
இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles)
உள்ளது.

பகுதிகள்

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய ஒன்றிியம்பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கட்மைைப்பு .(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)

பகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசுத்தலைவர் குடியரசுதலைவர் நடுவண் அமைச்சரவை, பாருளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்்்நீதி மன்றம்்சச மற்றும் அதன் அமைப்பு.

பகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, ஆளூனர், மாநில அமைச்சரவை. மாநில சட்ட மன்றம்்அதன் அமைப்பு

 உயர்நீதின்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதி/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்திிிர்்யய ஆகியோர் குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்

பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள் தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி வட்டார மொழி நீதி மன்றங்களில் மொழி

பகுதி 18 (உட்பிரிவு 352-360) 

அவசர நிலைக்கான பிரகடனம் (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

அட்டவணைகள்

  • முதலாம் அட்டவணை (Articles 1 and 4)
  • இரண்டாம் அட்டவணை (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 and 221)
  • மூன்றாம் அட்டவணை (Articles 75(4), 99, 124(6)
  • நான்காம் அட்டவணை (Articles 4(1) and 80(2))
  • ஐந்தாம் அட்டவணை (Article 244(1))
  • ஆறாம் அட்டவணை (Articles 244(2) and 275(1))
  • ஏழாம் அட்டவணை (Article 246)
  • எட்டாம் அட்டவணை (Articles 344(1) and 351)
  • ஒன்பதாம் அட்டவணை (Article 31-B)
  • பத்தாம் அட்டவணை (Articles 102(2) and 191(2))
  • பதினோராம் அட்டவணை (Article 243-G) 
  • பனிரெண்டாம் அட்டவணை (Article 243-W) 



    செவ்வாய், 7 ஜூலை, 2020

    வெல்ல முடியாததல்ல கொரொனா

    வெல்ல முடியாததல்ல கொரொனா !

    சி.ஸ்ரீராமுலு 
    மூத்த பத்திரிகையாளர்

    அனுபவத்திலிருந்து...


    "இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். அரசு அறிவித்த முதல் 'லாக் டவுன்' மார்ச் 24 ஆம் தேதியிலிருந்தே வெளி பயணத்தை அடியோடு தவிர்த்தேன்".

    பக்கத்துத் தெருவிற்கு செல்ல வேண்டுமென்றாலும் கூட முக கவசத்தோடுதான் செல்வேன். சானிடைசர் (கிருமி நாசினி) பயன்படுத்துவேன். அடிக்கடி கை, கால்களை சோப்பு போட்டு கழுவுவது வழக்கமானது.

    சரியாக 90 தினங்கள் கழித்து 23.6.2020 அன்று மாலை 6 மணிக்கு உடலில் ஒருவிதமான சோர்வு தெரிந்தது. இரவு சுமார் 7.30 மணிக்கு நமது பாரம்பரிய வைத்திய முறையான 'ஆவி பிடித்தேன்'. ஆனால், சாப்பிடவும் முடியவில்லை. (பிடிக்கவில்லை). சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து விட்டேன். அன்றைய இரவு முழுவதும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டேன்.

    அடுத்த நாள்,(ஜூன் 24) காலை எழுந்ததும் வெந்நீரில் உப்பு, மஞ்சள்தூள் கலந்து கொப்புளித்தேன். உடலில் திடீர் மாற்றம் ஏற்பட காய்ச்சலுக்கான மாத்திரையை போட்டேன். இடையில் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. அன்றைய இரவும் குளிர், காய்ச்சல், தூக்கமின்மை பிரச்சனை என்னை விட்டுவைக்கவில்லை.

    மறுநாள் ஜூன் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நான் வசிக்கும் பகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் மாநகராட்சி முகாம் சென்று கோவிட்-19 பரிசோதனையில் மாதிரி கொடுத்தேன். 
    பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவரும் சாதாரண காய்ச்சல், சளிக்கு மாத்திரை கொடுத்து, ஊசி போட்டு அனுப்பினார். இருந்தபோதிலும், உடல் சோர்வடைய தொடங்கி விட்டது. படுக்கையில் திரும்பிப் படுப்பதே ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்லிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது.

    ஜூன் 26 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்தபோது (அது நான் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை கூடுதலாக 2.30 மணி நேரம் கூடுதலாகும்) உடல் முழுக்க வலி, ஒரு விதமான காய்ச்சல், ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. நிலைமையை உணர்ந்து கொண்டேன்.

    வீட்டில் இருந்தவர்கள் சற்று பதற்றமடைந்தனர். அந்த நேரம் எனது மனைவியின் தம்பி வீட்டுக்குள் வர, அடுத்த சில நிமிடங்களிலே இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவ மனைக்கு சென்றோம். அங்கு பரிசோதித்த மருத்துவர், உள் நோயாளியாக சுமார் 8 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் (அப்ரிவேஷன்) இருக்க வேண்டுமென்றார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். 

    பிறகு சிகிச்சை துவக்கினார்கள். அன்றைய இரவு சற்று காய்ச்சல், வலி குறைந்தது. 28 ஆம் தேதி காலை மருத்துவமனையிலிருந்து ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தோம்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில், சென்னை மாநகராட்சி பணியாளர் ஒருவர் பட்டியலுடன் வீட்டின் முன்பு நின்று எனது பெயரை உச்சரித்ததும்  கோவிட்19 "பாசிட்டிவ்" என்று முடிவு செய்து விட்டோம்.

    என் குடும்பத்தினர் தொடர்ந்து பதட்டமடைந்தனர். என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்த எனது குடும்பத்தினர் என் மச்சினனை உடனே உதவிக்கு அழைத்தனர். 

    என் நிலை கண்டு என் குடும்பத்தினர், உறவினர்கள் பதற்றம் அடைவதை பார்க்க முடிந்தது. அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டு வைத்தியம் பார்க்க அவர்களுக்கு விருப்பமில்லை. 

    (கட்சித் தலைவர்கள் கூறிய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை)

    நானோ, மாநகராட்சி நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க, மீண்டும் இருசக்கர வாகனத்தில் எனது மைத்துனருடன் அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றோம். பாதுகாப்புக்கு காவலர்கள் இருவர் பின் தொடர்ந்தனர்.

    அயனாவரம் மருத்துவர்கள் ஒருமுறைக்கு மூன்று முறை பரிசோதனை செய்தனர். அனைத்தும் மாலை 6 மணிக்கு முடிந்தது. 20 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அனுமதி கொடுத்தனர்.

    நான் வீட்டிற்கு திரும்புவதற்குள் 'ஸ்டிக்கர்' ஒட்டுவது, நோய்த்தடுப்பு எச்சரிக்கை பேனர் கட்டுவது, தடுப்பு சுவர் (இரும்பு தகடு) அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாநகராட்சி பணியாளர்கள் செவ்வனே செய்து முடித்து விட்டனர்.

    வீட்டில் எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது. வேறு வழியின்றி நான் என் இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

    ஆனாலும், காய்ச்சல்,  ஒருவிதமான கரகரப்பு, வயிற்றில் உணவு செரிக்காத உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதையும் உணர முடிந்தது. 

    (இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தீக்கதிர் அனைத்து பதிப்பு தோழர்கள், சக பத்திரிகையாளர்கள், சங்கத் தலைவர்கள், உறவினர்கள் ஒருபுறம் வரிசையாக செல்போனில் தொடர்பு கொள்ள) 
    மறுபுறத்தில் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தன்னார்வ, மருத்துவர்கள் என பலரும் நேரில் வந்ததுடன், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரித்ததோடு எனக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

    வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட மூன்று நான்கு தினங்கள் மிகவும் சிரமப்பட்டேன். மீண்டும் சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு தொல்லைகளால் உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமல்  இருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி, தாகம், குளிர், வெப்பம் இது குறித்து எனது மூளைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தண்ணீர் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளவும் முடிந்தது. 

    நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன். இந்த நோயை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

    பிறகு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஹோமியோபதி மடித்து வைத்திருக்கும் சென்றேன். ஆனாலும் மாற்றம் தெரியவில்லை.
    மருந்தில்லாத ஒரு நோய்க்கு மருத்துவர் என்ன செய்வார் என்ற எண்ணமும் எனது மனதை தேற்றிக் கொண்டே இருந்தது.

    அந்த சமயம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் யுனானி மருத்துவம் குறித்த செய்திக்காக என்னை தொடர்பு கொண்டார். அப்போது, அது நிலைமையை அவரிடம் விளக்கினேன். 

    அவரும் அடுத்த நிமிடமே, யுனானி மருத் துவரிடம் இணைப்பில் சேர வரும் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே எனக்கு வைத்தியம் பார்த்து வரும் ஆங்கில மருத்துவரை தொடர்பு கொண்டேன். அவரும் பச்சைக் கொடி காட்டினார். 

    யுனானி மருத்துவரை அணுகினேன். அவரும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மாத்திரைகளை வீட்டிற்கே அனுப்பி வைத்தார். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்ட இரண்டு நாட்களில் உடலில் நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது. காய்ச்சல் அரவே நின்றுவிட்டது அதற்கான அறிகுறியே இல்லை. நுகர்வுத் தன்மையும் கிடைத்தது. உணவும் எடுத்துக் கொண்டேன். இதை விட முக்கியம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தூக்கமின்மை பிரச்சினையும் ஓய்ந்தது.

    என்னை வெளியில் இருந்து கவனித்துக் வரும் எனது குடும்பத்தினர், எனது மருத்துவ சகோதரர், மாநகராட்சி களப்பணியாளர்கள், அதிகாரிகளின் நம்பிக்கை மிக விரைவில் குணப்படுத்திவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். 

    மருத்துவரின் ஆலோசனை படி தேவையை அறிந்து உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தோம். சூடான வெந்நீர், இஞ்சி சாறு, ரசம், எலுமிச்சைத் தோலுடன், மஞ்சள் தூள், மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, வேப்பிலை கலந்த கசாயம், கபசுரக் குடிநீர். வெந்நீர் அதிக அளவு, அவித்த முட்டை, இட்லியை உணவாக எடுத்துக் கொண்டேன்.

    தொண்டையில் உருவாகும் இந்த கிருமியை நுரையீரலுக்கு அனுப்புவதும், வயிற்றுக்கு அனுப்புவதும் நம் கையில்தான் உள்ளது.

    புகை, மது போன்ற தீய பழக்க வழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் கிருமி நுரையீரலுக்குச் சென்று அது உங்களை வென்று கொண்டிருக்கிறது என்று பொருள். அந்தப் பழக்க வழக்கம் இல்லை என்பதால் அதை நீங்கள் வென்று விட்டீர்கள் என்று பொருள். (இந்தப் பழக்கம் இல்லாதவர்கள் நானும் ஒருவன்)

    வயிற்றுக்கு அனுப்பும் வேலையை நீங்கள் குடிக்கும் சூடான பானம் செய்து விடும். பயம் கொள்ள தேவையில்லை. மஞ்சள், உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, மாத்திரை பயன்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று முறை வெந்நீரில் 'ஆவி பிடித்தேன்'.

    மூச்சுவிட மிகவும் சிரமமானால் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டால் நன்றாக மூச்சுவிட முடியும்.

    கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல! நாம் வாழப் பிறந்தவர்கள். கண்ணுக்குத் புலப்படாத ஒரு வைரஸிடம் தோற்றுப்போகுபவர்கள் அல்ல‌!!

    புதன், 27 மே, 2020

    Jeevan Lakshya

    • Jeevan Lakshya is the ideal plan to protect your goals & needs as this plan offers the regular income to the family in case of an unfortunate event
    • In case of any unfortunate event premium ceases & Annual Income Benefit is paid to the family every year till maturity which is 10% of Sum Assured. On Maturity, 110% of Sum Assured is paid along with vested Bonus & final bonus, if any
    • The benefits under this plan are tax-free
    • This plan has an option of choosing the Accidental Life cover, Disability Benefit & Critical illness cover
    • This plan also has the option of taking the Maturity proceeds in instalments as the policy-holder can choose the no of year as 5, 10 or 15.
    • In a similar way, the policyholder also has the option of choosing the death benefit in instalments
    • LIC also offer the discount in the premium in case the mode of payment is Yearly
    • The loan is also available to the policyholder after the completion of 1 year of the policy
    For more information about 
    Jeevan Lakshya
    Contact
    K DHAMODHARAN M.Com.,LLB.,HDCM
    Financial Planner
    +91 7358210672

    செவ்வாய், 26 மே, 2020

    கல்வி கடனுக்கான மத்திய அரசின் புதிய அறிவுருத்தல்

     கல்வி கடனுக்கான மத்திய அரசின்  புதிய அறிவுருத்தல் 

    பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இந்த
     "வித்யா லட்சுமி கார்யகிரம்’ https://www.vidyalakshmi.co.in/Students   
     இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வண்டும்


     வித்யா லட்சுமி கார்யகிரம்’ ( Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை
     NSDL என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
     கல்விக் கடன் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் பெறலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 34 வங்கிகள் தங்களது கல்விக் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது NSDL அமைப்பு நிர்வகிக்கும் 

    இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பிக்க வேண்டும்.* 
    கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
    அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘ வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
      இந்த திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
    அனைவருக்கும் இலவசமாக கல்வியை அரசே வழங்குவதும்
    அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை அரசே நடத்தினால் கடன் வாங்க  தேவை இல்லை.


     வித்யா லட்சுமி கார்யகிரம்’ 
    https://www.vidyalakshmi.co.in/Students
    "வித்யா லட்சுமி கார்யகிரம்’ 
    https://www.vidyalakshmi.co.in/Students   

    பணத்தை பாதுகாக்க 5 வழிகள்

    பணத்தை ஈட்டுவதை விடவும் பாதுகாப்பது கடினம்.  பணத்தை பாதுகாக்க 5 வழிகள்.உங்கள் பொருளாதார வாழ்விற்க்கு சிறப்பான வடிவம் கிடைக்க ஐந்து வழிகள். *செலவுகளை பதிவு செய்யுங்கள்* இது மிகவும் எளிமையான ஆனால் வலிமையான செயல்முறை. உங்கள் செலவுகள் உங்கள் கட்டுபாட்டுக்கு கீழ் வந்தாலே , உங்கள் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். உங்கள் செலவுகளை எழுத துவங்கும் பொழுதே... நாம் செய்யும் செலவுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு ஏற்படும் . நீங்கள் பதிவு செய்த செலவு கணக்குகளை சில மாதங்களுக்கு ஒரு முறை ஆராய்ந்து பாருங்கள். தேவையேயில்லாமல் நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் சில பொருட்களை உங்களால் கண்டறியமுடியும். ஆசைக்காக சில பொருட்களை வாங்கலாம். ஆனால் அனைத்து பொருட்களையும் ஆசையின் பெயரில் வாங்குவது மிகப்பெரிய பணநெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை நம்மால் உணரமுடியும். செலவுகளை பதிவு செய்யும் இந்த பழக்கத்தால் ஆசைக்கு செலவு செய்வதை விட தேவைகளுக்கு செலவு செய்வது குறித்த தெளிவு நமக்கு கிடைப்பது உறுதி. *ஆராய்ந்து பாருங்கள்* கார், பெரிய எலக்ட்ரானிக் சாதனங்கள், நகைகள், போன்ற விலைமதிப்புமிக்க பொருட்களை வாங்கும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் பல இடங்களில் ஆராய்வது அவசியம். தற்சமயம் இணையத்தில் பொருட்கள் குறித்த விமர்சனங்கள், குறிப்பிட்ட பொருட்கள் எங்கே விலை குறைவாக தரமாக கிடைக்கும் போன்ற தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. அவைகளை ஓர் பார்வை பார்த்த பின் பொருட்களை வாங்குவது குறித்த முடிவினை எடுக்கலாம். *பொறுமையாக இருங்கள்*பெரும்பாலும் சற்று பொறுமையாக இருந்தாலே சில ஆயிரங்களை சேமித்து விடலாம். இன்று இந்த சமயம் உடனடி தேவையாக தெரியும் சில பொருட்கள் ஒரு சில மாதங்களில் உங்களுக்கு தேவையற்றதாக மாறலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குகிற பொழுது உடனடி முடிவுகளை எடுக்காமல் சற்று நேரம் ஒதுக்கி சிந்தித்து பாருங்கள்.... இரண்டு நாட்களின் உங்கள் முடிவுகளின் தீவிரமும்... வாங்க வேண்டும் என்ற எண்ணத்தின் ஆர்வமும் அடர்த்தியும் குறையும். உதாராணமாக சில எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க விளைகிறீர்கள் அந்த முடிவை சற்று ஒத்தி வைத்தால் விழா கால சலுகைகள் கிடைக்கும். ஆரம்பத்தில் விலை அதிகமாக விற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் சில நாட்களில் குறைய துவங்கும். எனவே காத்திருப்பதற்க்கும், முடிவுகளை குறித்து சிந்திப்பதற்க்குமான சூழல் இருந்தால் சற்று சிந்தித்து செயல்படுங்கள். *நிதர்சனத்தை உணருங்கள்* பெரும்பாலும் நாம் டீ, காபி, சிகரேட் போன்ற சிறிய சிறிய விஷயத்திற்க்கு அதிகம் செலவு செய்வோம்.... தினசரி இந்த செலவுகளை செய்கிற பொழுது அதிக விலை மதிப்புமிக்கதாக தோன்றாது. ஆனால் மாதக்கடைசியில் கணக்கிட்டால் இது கணக்கில் கொள்ள வேண்டிய பெரிய தொகையாக வளர்ந்திருக்கும். உதாராணமாக உங்களுக்கு தொடர் பழக்கம் ஏதேனும் இருந்தால் கண்கானித்து பாருங்கள். ஒருநாளைக்கு எத்தனை முறை டீ காபி அருந்துகிறீர்கள் அது எந்த விதமான செலவினை தருகிறது. குறைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் குறைத்து கொள்ளுங்கள் மாத கடைசியில் நீங்கள் குறைத்ததால் சேமித்த தொகை நிச்சயம் உங்களுக்கு வியப்பை அளிப்பதாய் இருக்கும். *சேமிப்பும் முதலீடும்* சீறிய ஒழுக்கத்துடன் தவறாமல் சேமிப்பதும் முதலீடு செய்வதும் பொருளாதார மேலாண்மையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எத்தனை விரைவாக சேமிக்க முடியுமோ சேமிக்க துவங்குங்கள். உங்களின் வருமானம் மற்றம் தேவையான செலவுகளை கணக்கிட்டு சரியான சேமிப்பு தொகையை நிர்ணயம் செய்யுங்கள். மாதத்தின் முதல் தேதியில் நீங்கள் நிர்ணயித்த தொகையை சேமிப்பதை முதல் வேலையாக செய்யவேண்டும்.
    தாமோதரன் கி
    Financial Planner
    +91 7358210672

    வியாழன், 12 டிசம்பர், 2019

    LIC s Jeevan Umang REVIEW


     

    Key Features of LIC Jeevan Umang Policy

    This is an endowment cum whole life policyOffers 8% of Sum Assured after the premium payment term - till you are alive or till the age of 100Plan offers Simple Reversionary Bonus & Final Addition BonusTax Benefits on Premiums, Death Benefit & Maturity Benefits

    Benefits of LIC Jeevan Umang Policy

    Listed below are the LIC Jeevan Umang Plan Benefits.

    Death BenefitIf the policyholder dies before the “Risk Commencement Date” - All the premiums paid will be returned to the nominee.If the policyholder dies after the “Risk Commencement Date” - The nominee will get the Sum Assured on Death.
    Sum Assured on Death is the highest of the following:10 times the Annualised PremiumBasic Sum Assured + Simple Reversionary Bonus + Final Addition Bonus
    The Death Benefit will never be less than 105% of all premiums paid.

    The premiums referred in the Death Benefit do not include taxes, Rider premiums and any increased premium on account of underwriting decisions.

    Survival Benefit

    On completion of a year after the premium payment term, the policyholder will start get 8% of the Basic Sum Assured every year. This amount is payable every year till he reaches the age of 100 or he dies, whichever is earlier.

    Maturity Benefit

    On reaching 100 years of age, the policyholder will get the Sum Assured + Simple Reversionary Bonus + Final Addition Bonus.

    Loan Facility

    You will be eligible to get a loan against this policy once it acquires a Surrender Value. This plan gets a Surrender Value only after 3 full years of premiums have been paid. The loan amount and interest rate would depend on the prevailing at the time of taking the loan.
     

    LIC Jeevan Umang Plan Example

    Let us understand this plan with the help of an example:

    Suppose Sachin who is 35 years old buys this plan with the following parameters.

    Sum Assured = Rs. 50,00,000
    Policy Term = 100 - Age at entry = 100 - 35 = 65 years
    Premium Payment Term = 20 years

    Based on this the yearly premium will be Rs. 2,60,000 + (Approx)

    Since his age is greater than 8 years at the time of taking the plan, the risk cover will start immediately. 

    Scenario 1 Sachin dies after 7 years of paying the premium.

    His nominee will get the Death Benefit which is higher of the following:10 times the Annualised Premium = Rs. 26,00,000 or Basic Sum Assured + Simple Reversionary Bonus + Final Addition Bonus = Rs. 50,00,000 + Simple Reversionary Bonus + Final Addition BonusIn fact, his nominee will get this same benefit, if Gaurav dies anytime before the premium payment term.

    Scenario 2 Sachin dies after 22 years of taking the plan and has paid all 20 premiums.

    Since his premium payment of 20 years is over, he would be eligible for Survival Benefits every year after that as follows:1 year after he has finished paying the 20th premium = 8% of Sum Assured = 8% of Rs. 50,00,000 = Rs. 400,000. 2 years after he has finished paying the 20th premium = 8% of Sum Assured = 8% of Rs. 50,00,000 = Rs. 400,000
    His nominee will get the Death Benefit which is higher of the following:10 times the Annualised Premium = Rs. 2,60,000 or Basic Sum Assured + Simple Reversionary Bonus + Final Addition Bonus = Rs. 50,00,000 + Simple Reversionary Bonus + Final Addition Bonus
    Note: Now for every year that Sachin is alive after the premium paying term, he will get 8% of the Basic Sum Assured. He will get this Rs. 400,000 till he reaches the age of 100 or till his death, whichever is earlier.

    Also, if Gaurav dies anytime after the premium payment term, his nominee will get the Death Benefit and the policy will terminate.

    Scenario 3 -   Sachin survives till the age of 100.

    He will get the Survival Benefit of Rs. 400,000 every year after the completion of the premium payment term of 20 years. 

    He is also eligible for the Maturity Benefit also which = Sum Assured + Simple Reversionary Bonus + Final Addition Bonus.
     

    Other Optional Benefits of LIC Jeevan Umang Policy

    The following riders can be taken by paying an additional premium:Accidental Death and Disability BenefitAccident Benefit RiderNew Term Assurance RiderNew Critical Illness Benefit Rider

    Eligibility condition of LIC Jeevan Umang Policy

      MinimumMinimumSum AssuredRs. 1,00,000 Premium Payment Term option 15, 20, 25, & 30 years Policy Term100 - Age at entryAge at Entry 90 days 55 years Age at End of Premium Payment Term 30 years70 yearsPremium Payment ModesYearly, Half-Yearly, Quarterly, Monthly 

    Other conditions in LIC Jeevan Umang

    Revival of the policy

    If premiums are not paid on time, even after the grace period, the policy will lapse. A lapsed policy can be revived within a period of 5 consecutive years from the date of first unpaid premium but before the date of Maturity. You will need to pay all the due premium with interest (compounding half-yearly) at a rate fixed by LIC.

    Paid-up Value (Propsante Sum Assured)

    . If at least three full years’ premiums have been paid and any subsequent premiums be not duly paid, the policy shall not be void but shall continue as a paid-up policy till the end of policy term. If less than three years’ premiums have been paid and policy has not been revived, all the benefits under the policy shall cease after the expiry of grace period and nothing shall be payable

    The Sum Assured on Death under a paid-up policy shall be reduced to a sum called “Death Paid-up Sum Assured” and shall be equal to [(Number of premiums paid /Total number of premiums payable) * Sum Assured on Death].

    The Sum Assured on Maturity under a paid-up policy shall be reduced to a sum called “Maturity Paid-up Sum Assured” and shall be equal to [(Number of premiums paid /Total number of premiums payable)*(Sum Assured on Maturity)].

    Surrendering the Policy

    The policy can be surrendered at any time provided premiums have been paid for at least three consecutive years. On surrender of the policy, LIC shall pay the Surrender Value equal to higher of Guaranteed Surrender Value and Special Surrender Value. 

    The Special Surrender Value is reviewable and shall be determined by the Insurer from time to time subject to prior approval of IRDAI. 

    The Guaranteed Surrender Value payable during the policy term shall be equal to the total premiums paid multiplied by the Guaranteed Surrender Value factor applicable to total premiums paid. These Guaranteed Surrender Value factors expressed as percentages will depend on the policy term and policy year in which the policy is surrendered

    Free look period

    If the Policyholder is not satisfied with the “Terms and Conditions” of the policy, the policy may be returned to LIC within 15 days from the date of receipt of the policy bond stating the reasons of objections. On receipt of the same LIC shall cancel the policy and return the amount of premium deposited after deducting the proportionate risk premium (for base plan and rider, if any) for the period on cover and stamp duty charges.

    If you have any questions on this plan, please call us on +91 7358210672 and we would be happy to help.

    Dhamodharan K

    Chief Life Insurance Advisor

    LIC OF INDIA

    licdhamu@gmail.com

    புதன், 26 ஜூன், 2019

    உண்மை

    படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

    படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

    *சம்பவம்-1*

    24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

    மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

    அவனருகில் இருந்த அவனது அப்பா

    சிரித்துக்கொண்டார்.

    ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

    மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

    "அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்

    நம்மோடு வருகின்றன..; என்றான்...

    இதைக்கேட்டு தாங்க முடியாத

    தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

    "நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

    அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்

    கொண்டே சொன்னார்...

    "நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

    என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு

    தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

    அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை

    இழந்துவிடலாம்.

    சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

    'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்

    எடை போடவேண்டாம்.

    *சம்பவம்-2*

    ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

    அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

    தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

    பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

    தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

    உடனே அந்த சிறுமி, தாயிடம்

    சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

    நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

    அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

    அடுத்தவருக்கு போதுமான அளவு

    இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

    நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

    எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

    மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

    *சம்பவம்-3*

    செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை

    விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

    வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

    ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

    "ஐந்து ரூபாய்"

    ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

    மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

    "இல்லம்மா வராதும்மா"

    அதெல்லாம் முடியாது.

    மூன்று ரூபாய் தான்

    பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

    பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

    "மேல ஒரு ரூபாய் போட்டு

    கொடுங்கம்மா" என்கிறாள்"

    முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

    கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

    "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

    "என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

    இல்லம்மா போய்தான் கஞ்சி

    காய்ச்சிணும்"

    "சரி. இரு இதோ வர்றேன்." என்று

    கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

    திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

    என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

    எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

    "ஏம்மா ஐந்து ரூபாய்க்கு

    பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு

    வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு

    முப்பது ரூபாய் வருதும்மா.....?

    என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

    "வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

    இது தான் உண்மையில் மனித நேயம் ......

    *சம்பவம் 4*

    மாலையில் நடைப் பயிற்சியை

    முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்

    வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

    வரும் வழியில் ஒரு

    கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

    சற்று இருட்டியதால் இருவரும்

    வேகமாக நடக்கத் தொடங்கினர்...

    திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்

    ஓடத்தொடங்கினர்.

    கணவர் வேகமாக ஓடினார்.

    கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து

    முடிக்கும் போது தான் மனைவி

    பாலத்தினை வந்தடைந்தார்.

    மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து

    வந்ததால் மனைவி பாலத்தை கடக்க

    பயப்பட்டாள்.

    அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

    இருட்டில் எதுவும் தெரியவில்லை.

    மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

    தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

    கணவனை அழைத்தாள்.

    கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

    அவளுக்கு அழுகையாய் வந்தது.

    இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

    மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

    பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு

    இக்கட்டான நிலமையில் கூட உதவி

    செய்யாத கணவனை நினைத்து

    வருந்தினாள்.

    ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

    கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

    அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்

    கொண்டிருந்தார்.

    சில சமயம் கணவர் குடும்பத்திற்கு

    எதுவும் செய்யாமல் மௌனமாக

    இருப்பதாக தோன்றும்...

    ஆனால்

    உண்மையிலேயே அவர் தன்

    குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்

    கொண்டுதான் இருப்பார்.

    தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

    வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

    தூரத்தில் இருப்பது தெளிவாக

    தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

    இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

    நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

    அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

    வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

    எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.