Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

உங்கள் போர்ட்ஃபோலியோவை

உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வதற்கும், அடுத்த ஆண்டு முதலீடுகளைத் திட்டமிடுவதற்கும் ஆண்டு இறுதி சரியானது ஆகும்.
ஏனெனில், வரி செலுத்துவோர், வரிச் சேமிப்பு நோக்கங்களுக்காக முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரமும் இதுவாகும்.

நீங்கள் வரி சேமிப்பு முதலீடுகளைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நல்ல வருமானத்தையும் தரக்கூடியதும், பாதுகாப்பான வரிச்சலுகை திட்டங்கள் க

  வரி சேமிப்பு திட்டமிடுங்க 

 வரி சேமிப்பு முதலீடுகளைத் தேடுகிறீர்கள் என்றால் இங்கே சில பிரபலமான பாதுகாப்பான திட்டங்கள் உள்ளன.

இந்த 5 வரி சேமிப்பு திட்டத்தை ஞாபகம் வச்சிக்கோங்க.. கண்ணை மூடிட்டு முதலீடு பண்ணலாம்
வரி செலுத்துவோர், வரிச் சேமிப்பு நோக்கங்களுக்காக முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரமும் இதுவாகும்.

உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வதற்கும், அடுத்த ஆண்டு முதலீடுகளைத் திட்டமிடுவதற்கும் ஆண்டு இறுதி சரியானது ஆகும்.
ஏனெனில், வரி செலுத்துவோர், வரிச் சேமிப்பு நோக்கங்களுக்காக முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய நேரமும் இதுவாகும்.

நீங்கள் வரி சேமிப்பு முதலீடுகளைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நல்ல வருமானத்தையும் தரக்கூடியதும், பாதுகாப்பான வரிச்சலுகை திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை வழங்கும் PPF என்பது நீண்ட கால வரி சேமிப்பு முதலீடுகளில் ஒன்றாகும்.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு பல தவணைகள் அல்லது மொத்த முதலீடு மூலம் நீங்கள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்யலாம்.

உங்கள் முதலீட்டின் பன்முகத்தன்மையுடன், இந்த முதலீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும். தற்போது, PPF முதலீட்டின் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆக உள்ளது.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)

NPS என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் வரி-சேமிப்பு திட்டமாகும், இது ரிஸ்க்-எதிர்ப்பு முதலீட்டாளர்களுக்கு ஓய்வூதிய கார்பஸை உருவாக்குவதற்கு ஏற்றது.

இந்தத் திட்டம் பிரிவு 80CCD இன் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரி விலக்கு பெற அனுமதிக்கிறது – பிரிவு CCD (1) இன் கீழ் ரூ.1.5 லட்சம், மற்றும் பிரிவு CCD (1B) இன் கீழ் ரூ.50,000 கூடுதலாக வரிச் சலுகை பெற்றுக்கொள்ளலாம்

காப்பீட்டுத் திட்டங்கள்

காப்பீடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத திட்டமாக காணப்படுகிறது. இதில் சில பாலிசியின் பிரீமியத்துக்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி (PF)

ஓய்வூதிய திட்டமிடலுக்கு ஏற்ற மற்றொரு வரி சேமிப்பு திட்டம் வருங்கால வைப்பு நிதி ஆகும். பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பங்களிக்கும் ஊழியர்கள் பிரிவு 80C இன் கீழ் வரி தள்ளுபடிக்கு தகுதி பெறுகின்றனர்.

மியூச்சுவல் ஃபண்டுகள்

அதிக வருமானம் மற்றும் வரிச் சலுகைகள் முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களை வழங்குகின்றன.


புதன், 10 பிப்ரவரி, 2021

ஓய்வூதியம் என்றால் என்ன?

ஓய்வூதியம் என்றால் என்ன?

நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார்.

செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.

‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.

நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத் பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972)நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு.

ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம்

1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.

இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .

ஓய்வூதிய விதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும்,பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன.

நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003முதல் முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். இது பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின் செயல்பாடு.
2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா.ஜ.க. கொண்டுவந்த நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்று ‘ஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill –ஐ அறிமுகப்படுத்தியது.

ஆனால், ஐ.மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது.
பி.எஃப்.ஆர்.டி.ஏ 2005 பில் –ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தது.

10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல்8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது
8.4.2010 முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க ஐ.மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல்‘.பி.எஃப்.ஆர்.டி.ஏ 2011 பில்’ என அறிமுகப் படுத்தியது.

ஆனால் இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ‘இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்’ என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது.

அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா?

புதிய ஓய்வூதியத்திட்டத்தில்
1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது.
2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது.
3.குடும்பஓய்வூதியம் கிடையாது.
4.பணிக்கொடை கிடைக்காது.
5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது.

-இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள்.

 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு CPS திட்டம் பொருந்தாது என Citu தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தொழிலாளியிடம் CPS காக பிடித்தம் செய்யப்படும் பணம் அத்திட்டத்தில் சேர்த்த கூடாது எனவும்,
தனி வங்கி கணக்கில் அப்பணத்தை சேர்த்து வர வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
 தொழிற்சங்கம் கட்சி சார்ந்திருக்க வேண்டும்.
அந்தக் கட்சியும் தொழிலாளி வர்க்க கட்சியாக இருக்க வேண்டும்.
அத்தகைய கட்சிகளாலேயே நமது உரிமைகளை பாதுகாக்க,
கோரிக்கைகளை நிறைவேற்ற
மக்கள் மன்றத்தில் போராட முடியும்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு
 (Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது
கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. 
இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles)
உள்ளது.

பகுதிகள்

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய ஒன்றிியம்பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கட்மைைப்பு .(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)

பகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசுத்தலைவர் குடியரசுதலைவர் நடுவண் அமைச்சரவை, பாருளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்்்நீதி மன்றம்்சச மற்றும் அதன் அமைப்பு.

பகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, ஆளூனர், மாநில அமைச்சரவை. மாநில சட்ட மன்றம்்அதன் அமைப்பு

 உயர்நீதின்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதி/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்திிிர்்யய ஆகியோர் குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்

பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள் தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி வட்டார மொழி நீதி மன்றங்களில் மொழி

பகுதி 18 (உட்பிரிவு 352-360) 

அவசர நிலைக்கான பிரகடனம் (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

அட்டவணைகள்

  • முதலாம் அட்டவணை (Articles 1 and 4)
  • இரண்டாம் அட்டவணை (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 and 221)
  • மூன்றாம் அட்டவணை (Articles 75(4), 99, 124(6)
  • நான்காம் அட்டவணை (Articles 4(1) and 80(2))
  • ஐந்தாம் அட்டவணை (Article 244(1))
  • ஆறாம் அட்டவணை (Articles 244(2) and 275(1))
  • ஏழாம் அட்டவணை (Article 246)
  • எட்டாம் அட்டவணை (Articles 344(1) and 351)
  • ஒன்பதாம் அட்டவணை (Article 31-B)
  • பத்தாம் அட்டவணை (Articles 102(2) and 191(2))
  • பதினோராம் அட்டவணை (Article 243-G) 
  • பனிரெண்டாம் அட்டவணை (Article 243-W) 



    செவ்வாய், 7 ஜூலை, 2020

    வெல்ல முடியாததல்ல கொரொனா

    வெல்ல முடியாததல்ல கொரொனா !

    சி.ஸ்ரீராமுலு 
    மூத்த பத்திரிகையாளர்

    அனுபவத்திலிருந்து...


    "இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். அரசு அறிவித்த முதல் 'லாக் டவுன்' மார்ச் 24 ஆம் தேதியிலிருந்தே வெளி பயணத்தை அடியோடு தவிர்த்தேன்".

    பக்கத்துத் தெருவிற்கு செல்ல வேண்டுமென்றாலும் கூட முக கவசத்தோடுதான் செல்வேன். சானிடைசர் (கிருமி நாசினி) பயன்படுத்துவேன். அடிக்கடி கை, கால்களை சோப்பு போட்டு கழுவுவது வழக்கமானது.

    சரியாக 90 தினங்கள் கழித்து 23.6.2020 அன்று மாலை 6 மணிக்கு உடலில் ஒருவிதமான சோர்வு தெரிந்தது. இரவு சுமார் 7.30 மணிக்கு நமது பாரம்பரிய வைத்திய முறையான 'ஆவி பிடித்தேன்'. ஆனால், சாப்பிடவும் முடியவில்லை. (பிடிக்கவில்லை). சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து விட்டேன். அன்றைய இரவு முழுவதும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டேன்.

    அடுத்த நாள்,(ஜூன் 24) காலை எழுந்ததும் வெந்நீரில் உப்பு, மஞ்சள்தூள் கலந்து கொப்புளித்தேன். உடலில் திடீர் மாற்றம் ஏற்பட காய்ச்சலுக்கான மாத்திரையை போட்டேன். இடையில் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. அன்றைய இரவும் குளிர், காய்ச்சல், தூக்கமின்மை பிரச்சனை என்னை விட்டுவைக்கவில்லை.

    மறுநாள் ஜூன் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நான் வசிக்கும் பகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் மாநகராட்சி முகாம் சென்று கோவிட்-19 பரிசோதனையில் மாதிரி கொடுத்தேன். 
    பின்னர் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவரும் சாதாரண காய்ச்சல், சளிக்கு மாத்திரை கொடுத்து, ஊசி போட்டு அனுப்பினார். இருந்தபோதிலும், உடல் சோர்வடைய தொடங்கி விட்டது. படுக்கையில் திரும்பிப் படுப்பதே ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்லிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது.

    ஜூன் 26 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்தபோது (அது நான் வழக்கமாக எழுந்திருக்கும் நேரத்தை கூடுதலாக 2.30 மணி நேரம் கூடுதலாகும்) உடல் முழுக்க வலி, ஒரு விதமான காய்ச்சல், ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. நிலைமையை உணர்ந்து கொண்டேன்.

    வீட்டில் இருந்தவர்கள் சற்று பதற்றமடைந்தனர். அந்த நேரம் எனது மனைவியின் தம்பி வீட்டுக்குள் வர, அடுத்த சில நிமிடங்களிலே இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவ மனைக்கு சென்றோம். அங்கு பரிசோதித்த மருத்துவர், உள் நோயாளியாக சுமார் 8 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் (அப்ரிவேஷன்) இருக்க வேண்டுமென்றார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். 

    பிறகு சிகிச்சை துவக்கினார்கள். அன்றைய இரவு சற்று காய்ச்சல், வலி குறைந்தது. 28 ஆம் தேதி காலை மருத்துவமனையிலிருந்து ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தோம்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில், சென்னை மாநகராட்சி பணியாளர் ஒருவர் பட்டியலுடன் வீட்டின் முன்பு நின்று எனது பெயரை உச்சரித்ததும்  கோவிட்19 "பாசிட்டிவ்" என்று முடிவு செய்து விட்டோம்.

    என் குடும்பத்தினர் தொடர்ந்து பதட்டமடைந்தனர். என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்த எனது குடும்பத்தினர் என் மச்சினனை உடனே உதவிக்கு அழைத்தனர். 

    என் நிலை கண்டு என் குடும்பத்தினர், உறவினர்கள் பதற்றம் அடைவதை பார்க்க முடிந்தது. அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டு வைத்தியம் பார்க்க அவர்களுக்கு விருப்பமில்லை. 

    (கட்சித் தலைவர்கள் கூறிய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை)

    நானோ, மாநகராட்சி நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க, மீண்டும் இருசக்கர வாகனத்தில் எனது மைத்துனருடன் அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்றோம். பாதுகாப்புக்கு காவலர்கள் இருவர் பின் தொடர்ந்தனர்.

    அயனாவரம் மருத்துவர்கள் ஒருமுறைக்கு மூன்று முறை பரிசோதனை செய்தனர். அனைத்தும் மாலை 6 மணிக்கு முடிந்தது. 20 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அனுமதி கொடுத்தனர்.

    நான் வீட்டிற்கு திரும்புவதற்குள் 'ஸ்டிக்கர்' ஒட்டுவது, நோய்த்தடுப்பு எச்சரிக்கை பேனர் கட்டுவது, தடுப்பு சுவர் (இரும்பு தகடு) அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாநகராட்சி பணியாளர்கள் செவ்வனே செய்து முடித்து விட்டனர்.

    வீட்டில் எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது. வேறு வழியின்றி நான் என் இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

    ஆனாலும், காய்ச்சல்,  ஒருவிதமான கரகரப்பு, வயிற்றில் உணவு செரிக்காத உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதையும் உணர முடிந்தது. 

    (இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தீக்கதிர் அனைத்து பதிப்பு தோழர்கள், சக பத்திரிகையாளர்கள், சங்கத் தலைவர்கள், உறவினர்கள் ஒருபுறம் வரிசையாக செல்போனில் தொடர்பு கொள்ள) 
    மறுபுறத்தில் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தன்னார்வ, மருத்துவர்கள் என பலரும் நேரில் வந்ததுடன், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரித்ததோடு எனக்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

    வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட மூன்று நான்கு தினங்கள் மிகவும் சிரமப்பட்டேன். மீண்டும் சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு தொல்லைகளால் உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமல்  இருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி, தாகம், குளிர், வெப்பம் இது குறித்து எனது மூளைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தண்ணீர் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளவும் முடிந்தது. 

    நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன். இந்த நோயை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

    பிறகு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஹோமியோபதி மடித்து வைத்திருக்கும் சென்றேன். ஆனாலும் மாற்றம் தெரியவில்லை.
    மருந்தில்லாத ஒரு நோய்க்கு மருத்துவர் என்ன செய்வார் என்ற எண்ணமும் எனது மனதை தேற்றிக் கொண்டே இருந்தது.

    அந்த சமயம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் யுனானி மருத்துவம் குறித்த செய்திக்காக என்னை தொடர்பு கொண்டார். அப்போது, அது நிலைமையை அவரிடம் விளக்கினேன். 

    அவரும் அடுத்த நிமிடமே, யுனானி மருத் துவரிடம் இணைப்பில் சேர வரும் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே எனக்கு வைத்தியம் பார்த்து வரும் ஆங்கில மருத்துவரை தொடர்பு கொண்டேன். அவரும் பச்சைக் கொடி காட்டினார். 

    யுனானி மருத்துவரை அணுகினேன். அவரும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மாத்திரைகளை வீட்டிற்கே அனுப்பி வைத்தார். இந்த மாத்திரையை எடுத்துக் கொண்ட இரண்டு நாட்களில் உடலில் நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது. காய்ச்சல் அரவே நின்றுவிட்டது அதற்கான அறிகுறியே இல்லை. நுகர்வுத் தன்மையும் கிடைத்தது. உணவும் எடுத்துக் கொண்டேன். இதை விட முக்கியம் நீண்ட நாட்களுக்குப் பிறகு தூக்கமின்மை பிரச்சினையும் ஓய்ந்தது.

    என்னை வெளியில் இருந்து கவனித்துக் வரும் எனது குடும்பத்தினர், எனது மருத்துவ சகோதரர், மாநகராட்சி களப்பணியாளர்கள், அதிகாரிகளின் நம்பிக்கை மிக விரைவில் குணப்படுத்திவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். 

    மருத்துவரின் ஆலோசனை படி தேவையை அறிந்து உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தோம். சூடான வெந்நீர், இஞ்சி சாறு, ரசம், எலுமிச்சைத் தோலுடன், மஞ்சள் தூள், மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, வேப்பிலை கலந்த கசாயம், கபசுரக் குடிநீர். வெந்நீர் அதிக அளவு, அவித்த முட்டை, இட்லியை உணவாக எடுத்துக் கொண்டேன்.

    தொண்டையில் உருவாகும் இந்த கிருமியை நுரையீரலுக்கு அனுப்புவதும், வயிற்றுக்கு அனுப்புவதும் நம் கையில்தான் உள்ளது.

    புகை, மது போன்ற தீய பழக்க வழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் கிருமி நுரையீரலுக்குச் சென்று அது உங்களை வென்று கொண்டிருக்கிறது என்று பொருள். அந்தப் பழக்க வழக்கம் இல்லை என்பதால் அதை நீங்கள் வென்று விட்டீர்கள் என்று பொருள். (இந்தப் பழக்கம் இல்லாதவர்கள் நானும் ஒருவன்)

    வயிற்றுக்கு அனுப்பும் வேலையை நீங்கள் குடிக்கும் சூடான பானம் செய்து விடும். பயம் கொள்ள தேவையில்லை. மஞ்சள், உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, மாத்திரை பயன்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று முறை வெந்நீரில் 'ஆவி பிடித்தேன்'.

    மூச்சுவிட மிகவும் சிரமமானால் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டால் நன்றாக மூச்சுவிட முடியும்.

    கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல! நாம் வாழப் பிறந்தவர்கள். கண்ணுக்குத் புலப்படாத ஒரு வைரஸிடம் தோற்றுப்போகுபவர்கள் அல்ல‌!!

    புதன், 27 மே, 2020

    Jeevan Lakshya

    • Jeevan Lakshya is the ideal plan to protect your goals & needs as this plan offers the regular income to the family in case of an unfortunate event
    • In case of any unfortunate event premium ceases & Annual Income Benefit is paid to the family every year till maturity which is 10% of Sum Assured. On Maturity, 110% of Sum Assured is paid along with vested Bonus & final bonus, if any
    • The benefits under this plan are tax-free
    • This plan has an option of choosing the Accidental Life cover, Disability Benefit & Critical illness cover
    • This plan also has the option of taking the Maturity proceeds in instalments as the policy-holder can choose the no of year as 5, 10 or 15.
    • In a similar way, the policyholder also has the option of choosing the death benefit in instalments
    • LIC also offer the discount in the premium in case the mode of payment is Yearly
    • The loan is also available to the policyholder after the completion of 1 year of the policy
    For more information about 
    Jeevan Lakshya
    Contact
    K DHAMODHARAN M.Com.,LLB.,HDCM
    Financial Planner
    +91 7358210672

    செவ்வாய், 26 மே, 2020

    கல்வி கடனுக்கான மத்திய அரசின் புதிய அறிவுருத்தல்

     கல்வி கடனுக்கான மத்திய அரசின்  புதிய அறிவுருத்தல் 

    பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இந்த
     "வித்யா லட்சுமி கார்யகிரம்’ https://www.vidyalakshmi.co.in/Students   
     இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வண்டும்


     வித்யா லட்சுமி கார்யகிரம்’ ( Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை
     NSDL என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
     கல்விக் கடன் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் பெறலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 34 வங்கிகள் தங்களது கல்விக் கடன் வழங்கும் நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது NSDL அமைப்பு நிர்வகிக்கும் 

    இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பிக்க வேண்டும்.* 
    கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
    அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘ வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
      இந்த திட்டம் இந்த ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
    அனைவருக்கும் இலவசமாக கல்வியை அரசே வழங்குவதும்
    அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை அரசே நடத்தினால் கடன் வாங்க  தேவை இல்லை.


     வித்யா லட்சுமி கார்யகிரம்’ 
    https://www.vidyalakshmi.co.in/Students
    "வித்யா லட்சுமி கார்யகிரம்’ 
    https://www.vidyalakshmi.co.in/Students   

    பணத்தை பாதுகாக்க 5 வழிகள்

    பணத்தை ஈட்டுவதை விடவும் பாதுகாப்பது கடினம்.  பணத்தை பாதுகாக்க 5 வழிகள்.உங்கள் பொருளாதார வாழ்விற்க்கு சிறப்பான வடிவம் கிடைக்க ஐந்து வழிகள். *செலவுகளை பதிவு செய்யுங்கள்* இது மிகவும் எளிமையான ஆனால் வலிமையான செயல்முறை. உங்கள் செலவுகள் உங்கள் கட்டுபாட்டுக்கு கீழ் வந்தாலே , உங்கள் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். உங்கள் செலவுகளை எழுத துவங்கும் பொழுதே... நாம் செய்யும் செலவுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு ஏற்படும் . நீங்கள் பதிவு செய்த செலவு கணக்குகளை சில மாதங்களுக்கு ஒரு முறை ஆராய்ந்து பாருங்கள். தேவையேயில்லாமல் நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் சில பொருட்களை உங்களால் கண்டறியமுடியும். ஆசைக்காக சில பொருட்களை வாங்கலாம். ஆனால் அனைத்து பொருட்களையும் ஆசையின் பெயரில் வாங்குவது மிகப்பெரிய பணநெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை நம்மால் உணரமுடியும். செலவுகளை பதிவு செய்யும் இந்த பழக்கத்தால் ஆசைக்கு செலவு செய்வதை விட தேவைகளுக்கு செலவு செய்வது குறித்த தெளிவு நமக்கு கிடைப்பது உறுதி. *ஆராய்ந்து பாருங்கள்* கார், பெரிய எலக்ட்ரானிக் சாதனங்கள், நகைகள், போன்ற விலைமதிப்புமிக்க பொருட்களை வாங்கும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் பல இடங்களில் ஆராய்வது அவசியம். தற்சமயம் இணையத்தில் பொருட்கள் குறித்த விமர்சனங்கள், குறிப்பிட்ட பொருட்கள் எங்கே விலை குறைவாக தரமாக கிடைக்கும் போன்ற தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. அவைகளை ஓர் பார்வை பார்த்த பின் பொருட்களை வாங்குவது குறித்த முடிவினை எடுக்கலாம். *பொறுமையாக இருங்கள்*பெரும்பாலும் சற்று பொறுமையாக இருந்தாலே சில ஆயிரங்களை சேமித்து விடலாம். இன்று இந்த சமயம் உடனடி தேவையாக தெரியும் சில பொருட்கள் ஒரு சில மாதங்களில் உங்களுக்கு தேவையற்றதாக மாறலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குகிற பொழுது உடனடி முடிவுகளை எடுக்காமல் சற்று நேரம் ஒதுக்கி சிந்தித்து பாருங்கள்.... இரண்டு நாட்களின் உங்கள் முடிவுகளின் தீவிரமும்... வாங்க வேண்டும் என்ற எண்ணத்தின் ஆர்வமும் அடர்த்தியும் குறையும். உதாராணமாக சில எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க விளைகிறீர்கள் அந்த முடிவை சற்று ஒத்தி வைத்தால் விழா கால சலுகைகள் கிடைக்கும். ஆரம்பத்தில் விலை அதிகமாக விற்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் சில நாட்களில் குறைய துவங்கும். எனவே காத்திருப்பதற்க்கும், முடிவுகளை குறித்து சிந்திப்பதற்க்குமான சூழல் இருந்தால் சற்று சிந்தித்து செயல்படுங்கள். *நிதர்சனத்தை உணருங்கள்* பெரும்பாலும் நாம் டீ, காபி, சிகரேட் போன்ற சிறிய சிறிய விஷயத்திற்க்கு அதிகம் செலவு செய்வோம்.... தினசரி இந்த செலவுகளை செய்கிற பொழுது அதிக விலை மதிப்புமிக்கதாக தோன்றாது. ஆனால் மாதக்கடைசியில் கணக்கிட்டால் இது கணக்கில் கொள்ள வேண்டிய பெரிய தொகையாக வளர்ந்திருக்கும். உதாராணமாக உங்களுக்கு தொடர் பழக்கம் ஏதேனும் இருந்தால் கண்கானித்து பாருங்கள். ஒருநாளைக்கு எத்தனை முறை டீ காபி அருந்துகிறீர்கள் அது எந்த விதமான செலவினை தருகிறது. குறைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் குறைத்து கொள்ளுங்கள் மாத கடைசியில் நீங்கள் குறைத்ததால் சேமித்த தொகை நிச்சயம் உங்களுக்கு வியப்பை அளிப்பதாய் இருக்கும். *சேமிப்பும் முதலீடும்* சீறிய ஒழுக்கத்துடன் தவறாமல் சேமிப்பதும் முதலீடு செய்வதும் பொருளாதார மேலாண்மையில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எத்தனை விரைவாக சேமிக்க முடியுமோ சேமிக்க துவங்குங்கள். உங்களின் வருமானம் மற்றம் தேவையான செலவுகளை கணக்கிட்டு சரியான சேமிப்பு தொகையை நிர்ணயம் செய்யுங்கள். மாதத்தின் முதல் தேதியில் நீங்கள் நிர்ணயித்த தொகையை சேமிப்பதை முதல் வேலையாக செய்யவேண்டும்.
    தாமோதரன் கி
    Financial Planner
    +91 7358210672